
காளிதேவியின் கனவுக் கூடாரம்
கலைந்த படியே கிடக்கிறது
வீணைநரம்புகள் விம்மியபடியே
நெற்றிப் புருவங்கள் சுழிக்கின்றன
பால் நிலவு அங்கு எறிப்பதில்லை
காலடி விளக்குகள் ஒளிர்வதில்லை
சதங்கையின் சங்கீதம் பிறப்பதில்லை
குந்தியிருந்த படியே
காற்றிலே கரைந்து போகிறேன்
வாழ்விடம் முழுவதும் வலிய இருள்
நெஞ்சங்கள் நிறைந்த கீறல்கள்
கட்டிக் கொண்ட புண்களாய்
இதயங்கள் கொதிப்படையும்
தாமரைக் குளக்காற்றோ
சுட்டெரிக்கும் சூரியனாய்;
மண்ணில் பட்டு மரத்துப்போகும்
கால் நடைகளின் கண்களில்
காய்ந்து போன கண்ணீர்த்துளிகள்
சொந்தங்களைத் தேடியதனால்
சோர்ந்து போன நடைப்பவனி
இரைந்து கொண்டிருந்த கடல்
மௌனம்காத்து அடங்கிப் போகிறது
மீண்டும் ஒரு சுனாமிக்காய்