தாய் நிலத்தின் நினைவுகள்
சேனையூர்
தௌ;ளுதமிழ்ச் சொல்
உச்சரிக்கும் போதே
உவகை உச்சிவரை மூட்டும்
முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும்
முன்னோர்கள் வாழ்ந்து வந்த
எங்கள் வளம் கொளிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும்
மீன் வளத்தை தான் சுமந்து
உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து
வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து
எப்பொழுதும் அரணாக
இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச
பண்பாடு காத்து பண்போடு
கலாசாரப் பெருமை காத்து
முத்தமிழ் கலை வளர்த்து
புத்தெழுச்சியோடு உத்வேகம்கொண்ட
உயிர்த் துடிப்புள்ள கிராமம்
காடும் மேடும் திருத்தி
களனிகளாய்ச் செப்பனிட்டு
வாழ்வளித்த உழவர் நாழும்
வலம் வந்த மண்
இன்று நார்நாராய் கிழிபட்டு
வேரோடு சாய்ந்த மரமாய்
மரணப்படுக்கையில் மண் மகள்
ஓடி வருகிறோம் வாரியணைக்கிறோம்
கண்ணீரை இறைத்துக் களைத்து
எம் சென்னீரை வியர்வையாக்கி
சிறுகச் சிறுக மெருகூட்டுகிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment